திருத்தணி முருகன் கோயிலில் காவடி எடுத்து பக்தர்கள் வழிபாடு
திருத்தணி முருகன் கோயிலில் ஆவணி கிருத்திகை விழாவையொட்டி நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோயிலில் குவிந்தனர்.
திருத்தணி முருகன் கோயிலில் ஆவணி கிருத்திகை விழாவையொட்டி நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோயிலில் குவிந்தனர்.
பிரசித்தி பெற்ற திருத்தணி முருகன் கோயிலில் ஆவணி கிருத்திகையான நேற்று அதிகாலை மூலவருக்குச் சிறப்பு அபிஷேகம் செய்விக்கப்பட்டது. முருகனுக்கு தங்கக்கிரீடம், தங்கவேல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்துச் சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டது.
காவடி எடுத்தும், வேல் குத்தியும் பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்தினர். வழக்கத்தை விட ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோயிலில் குவிந்ததால், மூலவரைத் தரிசிக்க ஆறு மணி நேரத்திற்குக் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகப் பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.
Advertisement