செய்திகள்

வேம்புலி அம்மன் கோயிலில் ஜாத்திரை திருவிழா

தினமணி


திருவள்ளூரில் உள்ள வேம்புலி அம்மன் கோயில் ஜாத்திரை திருவிழாவையொட்டி, அம்மன் மேளதாளம் முழங்க சிறப்பு வாண வேடிக்கையுடன் இரவு வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இக்கோயில் பிரசித்தி பெற்ற ஸ்தலமாக விளங்கி வருகிறது. இங்கு ஆண்டுதோறும் ஆவணித் திருவிழா 10 நாள்கள் கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல், இந்த ஆண்டுக்கான ஜாத்திரை திருவிழா கடந்த 7-ஆம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி, 16-ஆம் தேதி வரை நடைபெற்றது.
இதில் ஒவ்வொரு நாளும் சிறப்பு அபிஷேகம், அம்மன் புறப்பாடு, புடவை சாத்துப்படி, புஷ்ப சாத்துப்படி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிறைவாக ஞாயிற்றுக்கிழமை, அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் புஷ்ப அலங்காரம் நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து மேளதாளம் மற்றும் வாண வேடிக்கையுடன் முக்கிய வீதிகள் வழியாக அம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். 
இந்த விழாவில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் தினமும் அன்ன தானம் செய்யப்பட்டது. 
விழா ஏற்பாடுகளை வேம்புலி அம்மன் சேவா சங்கம் மற்றும் கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT