செய்திகள்

ஆண்டாள் திருக்கல்யாண வைபவத்தையொட்டி அத்திவரதர் தரிசன நேரத்தில் மாற்றம்!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் இன்று ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம்

தினமணி

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் இன்று ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளதால் அத்திவரதர் தரிசன நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அத்திவரதர் பெருவிழா 34-வது நாளாக நடைபெற்று வருகிறது. வரதராஜ பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் ஆடிப்பூரத் திருநாளன்று ஆண்டாள் திருக்கல்யாண வைபவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இன்று அந்த உற்சவம் நடைபெறுகிறது. 

கூடுதலாக, இந்தாண்டு அத்திவரதர் பெருவிழாவும் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் அத்திவரதர் தரிசன நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காக இன்று பிற்பகல் 2.00 மணிக்கு கிழக்கு கோபுர வாசல் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

அத்திவரதர் வைபவம் மாலை 5 மணியுடன் நிறுத்தப்பட்டு, ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அதன்பின் மீண்டும் 8 மணிக்குப் பிறகு இரவு 10 மணி வரை அத்திவரதரைத் தரிசிக்கலாம்.

மேலும், ஆகஸ்ட் 17-ம் தேதி அத்திவரதர் வைபவம் நிறைவடைவதால் அன்று மாலை 5.00 மணியோடு தரிசனம் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

என் மேல் ஒளிரும் சூரியன்... பூஜிதா பொன்னாடா!

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

SCROLL FOR NEXT