ஒரு திருமணம் நடப்பது என்பது கடவுள் பிராப்தம் என்றால் அதைவிட முக்கியம் சரியான சுபமுகூர்த்த வேளையில், மும்மூர்த்திகள், தேவர்கள், முன்னோர்கள் மற்றும் சுற்றம் சூழ சாட்சியாகக் கொண்டு, மணமகன் மணமகளின் திருமாங்கல்ய சரடை (மாங்கல்ய தாரணம்) மூன்று முடிச்சு கட்டும் நேரம் அமையவேண்டும். அப்பொழுதுதான் திருமணம் என்னும் வாழ்க்கை நீடித்து சுபிக்ஷ்மாக இருக்கும். சுபமுகூர்த்தம் குறிப்பது பற்றித் தெரிந்துகொள்ளலாம்
திருமணம் என்றவுடன் இருவீட்டாரின் பெற்றோர்களின் ஒப்புதலுக்கு ஏற்ப திருமண சடங்குகளை ஒன்றன்பின் ஒன்றாகச் செய்யவேண்டும். முதலில் நல்ல ஜோதிடர்கள் மூலமாக ஆண், பெண் இருவரின் திருமணப்பொருத்தம் என்னும் 12 நட்சத்திர பொருத்தத்தைப் பார்த்துவிடவேண்டும், இருவரின் ஜாதகத்தில் உள்ள தோஷம் (பாப தோஷ சாம்யம்) எந்த அளவில் உள்ளது, இருவரின் தசா புத்திகள் சரியாக உள்ளதா என்பதைத் துல்லியமாக ஒப்பிட்டு திருமணம் செய்ய முற்படவேண்டும்.
இதில் முக்கிய குறிப்பு.. ஆணின் தோஷம், பெண்ணை விட அதிகமாகவோ அல்லது சமமாக இல்லை எனில் திருமணம் செய்யக்கூடாது/ முக்கியமாக திருமணம் முகூர்த்தம் குறிப்பதை நல்ல ஜோதிடர் அல்லது புரோகிதரிடம் சரியான நாழிகையைக் கொண்டு அவரவர் முறைப்படி திருமணம் செய்ய வேண்டும்.
முகூர்த்தம் குறிக்கப் பெண்ணின் ஜாதகம் அவசியம் தேவை. சுபமுகூர்த்தம் என்ற நாழிகை குறிக்க, நல்ல நாள், நல்ல கிழமை, நல்ல திதி, நல்ல யோகம், தசா புத்திகள், அன்றைய கோட்சர நிலவரம் சரியாக உள்ளதா, குருபலம் மற்றும் சந்திர பலம் எவ்வாறு இருக்கிறது என்று மணமக்களின் ஜாதகம் கொண்டும் அலசி பார்க்கவேண்டும்.
நாம் தமிழ் காலண்டரில் குறிப்பிடும் சுப முகூர்த்தத்தை எடுக்காமல் ஜாதகப்படி முகூர்த்தம் குறிக்கவேண்டும். முகூர்த்தம் குறிக்க முக்கியமானது பெண்ணின் நட்சத்திரத்தை கொண்டு தாராபலன், சந்திரபலன், பஞ்சாங்கம் கணித்துப் பார்க்கவேண்டும். முகூர்த்த லக்னம் என்றழைக்கப்படும் ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், தனுசு, மாசி மாதத்தில் வரும் கும்பம் லக்னம் உத்தமமாக இருக்கும். முகூர்த்த லக்னத்திற்க்கு 2,7,8ம் இடம் சுத்தமாக இருக்க வேண்டும். லக்னத்திற்கும் பாப கர்த்தாரி கூடாது. 2, 7, 11-ம் அதிபதிகளின் தசாபுக்திகள் நடந்தாலும் திருமணம் செய்விக்கலாம்.
முகூர்த்தம் குறிக்க தவிர்க்க வேண்டியவை
முகூர்த்த நாட்களைத் தள்ளிப்போடலாம்
சிலருக்கு ஜாதக ரீதியாக திருமண பொருத்தம் சரியாக இருந்தாலும் முகூர்த்தம் அன்று பெண்ணிற்கு குரு பலன் பெற்றிருக்க வேண்டும். திருமண நாளன்று ஜாதக ரீதியாக பெண்ணிற்கு ஏற்ற தசா புத்தி, அந்தரம், சூட்சமங்கள் நடைபெற்றிருக்கிறதா என்று பார்க்கவேண்டும். சந்திரன் பலன் சரி இல்லையென்றால் திருமண முகூர்த்தத்தைத் தள்ளிவைக்கவும். சத்திர பலம் என்பது ஜென்ம நட்சத்திரம் முகூர்த்தம் குறிக்கக்கூடிய அன்றைய தினம் சந்திரன் நிற்கும் ராசி வரை எண்ணி வந்த கூட்டுத் தொகை உத்தமமா அசுபமா என்று பார்க்க வேண்டும்.
தேய் பிறைசந்திரன் வளர்பிறைச் சந்திரன் இவற்றையும் பிரித்து கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் . குரு பலமும், சந்திரன் பலமும், தசா புத்திகளும் சரியாக அமையாதவர்கள் திருமண முகூர்த்தம் நாட்களைத் தள்ளிப்போடலாம். சில நேரங்களில் தவிர்க்க முடியாத காரணங்களில் திருமணம் செய்ய நாட்கள் முன்பின் இருப்பதால் குலதெய்வ வழிபாடு மற்றும் நாந்தி சடங்குகள் சம்பிரதாயங்கள் செய்து பார்த்துக்கொள்ள வேண்டும். திருமண முகூர்த்தம் குறிப்பது என்பது பற்றிய விவரம் அனைத்து பெற்றோர்களும், பெரியோர்களும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
குருவே சரணம்
- ஜோதிட சிரோன்மணி தேவி
தொலைபேசி : 8939115647