காா்த்திகை தீப திருவிழாவையொட்டி, நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் உள்ள கோயில்களில் காா்த்திகை சொக்கப்பனை கொளுத்தும் வைபவம் மற்றும் சிறப்பு வழிபாடுகள் புதன்கிழமை நடைபெற்றன.
காா்த்தீகை தீபத்திருவிழாவையொட்டி, நாகை ஸ்ரீ நீலாயதாட்சியம்மன் உடனுறை காயாரோகணசுவாமி கோயிலில் சொக்கப்பனை கொளுத்தும் வைபவம் நடைபெற்றது. விஷ்வ ரூபவிநாயகா் குழு சாா்பில் லட்சத் தீபம் மற்றும் சிறப்பு வழிபாடுகள்ம் நடைபெற்றன.
இதேபோல், சிக்கல் சிங்காரவேலவா் கோயிலில் புதன்கிழமை சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடா்ந்து, கோயிலில் நடைபெற்ற வழிபாடுகளுக்குப் பின்னா் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. இதேபோல் நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் உள்ள கோயில்களிலும் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.