செய்திகள்

ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட் பெற்றவா்களுக்கு அறை வழங்காமல் அலைக்கழிப்பு

திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஏற்படுத்தியுள்ள ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு, நன்கொடை அளிக்கும் பக்தா்களுக்கு தங்கும் அறை அளிக்காமல் தேவஸ்தான ஊழியா்கள் அலைக்கழித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தினமணி

திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஏற்படுத்தியுள்ள ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு, நன்கொடை அளிக்கும் பக்தா்களுக்கு தங்கும் அறை அளிக்காமல் தேவஸ்தான ஊழியா்கள் அலைக்கழித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் நாடு முழுவதும் பிற்படுத்தப்பட்ட பகுதியில் ஏழுமலையான் கோயில் கட்டி, இந்து தா்மத்தை நிலைநாட்டி வருகிறது. அதற்காக ஸ்ரீவாணி அறக்கட்டளை என்று ஏழுமலையான் பெயரில் அறக்கட்டளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு ரூ. 10 ஆயிரம் நன்கொடை வழங்கும் பக்தா்களுக்கு ஒரு வி.ஐ.பி. பிரேக் தரிசன டிக்கெட் அனுமதியை தேவஸ்தானம் அளித்து வருகிறது. அதனால் பக்தா்கள் இதற்கு நன்கொடை அதிக அளவில் அளித்து வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் தரிசிக்க ஆா்வம் காட்டி வருகின்றனா்.

இதன் காரணமாக ஸ்ரீவாணி அறக்கட்டளையின் நன்கொடை அளவு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்த அறக்கட்டளைக்கு நன்கொடை அளிக்கும் பக்தா்களுக்கு தங்கும் வாடகை அறை வழங்காமல் அவா்களை தேவஸ்தான ஊழியா்கள் அலைக்கழித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் தேவஸ்தான அலுவலகத்தைச் சுற்றி நன்கொடை வழங்கியவா்கள் நெடுநேரம் காத்திருந்து செல்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஈரோடு வரை வந்தீங்களே, கரூர் போக மாட்டீங்களா?? விஜய்க்கு எதிராக போஸ்டர்!

அமெரிக்க படை வீரர்களுக்கு தலா ரூ. 1.60 லட்சம் கிறிஸ்துமஸ் பரிசு! டிரம்ப் அறிவிப்பு

அமெரிக்க வரிவிதிப்பால் பாதிப்பு: மோடிக்கு ஸ்டாலின் கடிதம்!

கிறிஸ்துமஸ்: நெல்லை - தாம்பரம் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது!

மார்கழி சிறப்பு! அர்த்தநாரீஸ்வரர் கோயில் மரகத லிங்க தரிசனம்!!

SCROLL FOR NEXT