மாசி பௌர்ணமி: திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம்
மாசி மாதப் பௌர்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் எது..
மாசி மாதப் பௌர்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் எது என்று ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருவண்ணாமலையில் கிரிவலம் பிரசித்தி பெற்றது. இங்குள்ள 14 கி.மீ. தொலைவிலான கிரிவலப் பாதையில் மாதந்தோறும் பௌர்ணமி நாள்களில் பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வந்து, செல்கின்றனர்.
இந்த நிலையில், மாசி மாதப் பௌர்ணமி செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 12.35 மணிக்குத் தொடங்கி, செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 19) இரவு 10.18 மணிக்கு முடிவடைகிறது.
எனவே, பக்தர்கள் இந்த நேரத்தில் கிரிவலம் வரலாம் என்று ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.