திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா வருகிற 22-ம் தேதி வரை நடைபெறுகிறது.
இன்று காலை 7 மணிக்கு கொடியேற்றப்பட்டு திருவிழா கோலாகலமாக தொடங்கியது. இன்று மாலை 6 மணிக்கு மகா தீபாராதனையும், இரவு 8 மணிக்கு அம்மன் மர கேடயத்தில் எழுந்தருளி திருவீதியுலாவும் நடைபெறுகிறது.
தைப்பூச திருவிழாவையொட்டி மாரியம்மன் 21-ம் தேதி கொள்ளிடம் வடதிருக்காவேரியில் தீர்த்தவாரி கண்டருள செல்வதால் அன்று மாலை 3.30 மணி முதல் கோயில் நடை சாத்தப்படும். பின்னர் மறுநாள் வழக்கம்போல் கோயில் நடை திறக்கப்பட்டு மூலஸ்தான அம்பாள் சேவை நடைபெறும்.