செய்திகள்

அத்திவரதரை தரிசிக்கச் செல்வோருக்கு: நாளை முதல் 6 சிறப்பு மின்சார ரயில்கள் அறிவிப்பு!

காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோயிலில் அத்திவரதர் தரிசனத்துக்காக  6 சிறப்பு மின்சார  ரயில்கள் ஜூலை 6-ஆம் தேதி முதல் இயக்கப்படவுள்ளன. 

தினமணி


காஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் கோயிலில் அத்திவரதர் தரிசனத்துக்காக  6 சிறப்பு மின்சார  ரயில்கள் ஜூலை 6-ஆம் தேதி முதல் இயக்கப்படவுள்ளன. 

முதல் சிறப்பு மின்சார ரயில், தாம்பரத்தில் இருந்து காலை 4.15 மணிக்கு புறப்பட்டு காலை 6.05 மணிக்கு காஞ்சிபுரத்தை  சென்றடையும்.

இரண்டாவது சிறப்பு மின்சார ரயில், சென்னை கடற்கரையில் இருந்து காலை 4.25 மணிக்கு புறப்பட்டு காலை 7.15 மணிக்கு காஞ்சிபுரத்தை அடையும்.

மூன்றாவது சிறப்பு மின்சார ரயில், செங்கல்பட்டில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு காலை 10.55 மணிக்கு காஞ்சிபுரத்தை  சென்றடையும்.

நான்காவது சிறப்பு மின்சார ரயில், செங்கல்பட்டில் இருந்து நண்பகல் 12 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.40 மணிக்கு காஞ்சிபுரத்தை அடையும்.

ஐந்தாவது சிறப்பு மின்சார ரயில், செங்கல்பட்டில் இருந்து பிற்பகல் 3.10 மணிக்கு புறப்பட்டு மாலை 4 மணிக்கு காஞ்சிபுரத்தை சென்றடையும்.

ஆறாவது சிறப்பு மின்சார ரயில், செங்கல்பட்டில் இருந்து மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு மாலை 6.45 மணிக்கு காஞ்சிபுரம் சென்றடையும். 

அதேபோல, மறுமார்க்கமாக காஞ்சிபுரத்தில் இருந்து 6 சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

முதலாவது சிறப்பு மின்சார ரயில், காஞ்சிபுரத்தில் இருந்து காலை 7.30 மணிக்கு புறப்பட்டு காலை 8.20 மணிக்கு செங்கல்பட்டை அடையும்.

இரண்டாவது  சிறப்பு மின்சார ரயில், காஞ்சிபுரத்தில் இருந்து காலை 9.50 மணிக்கு புறப்பட்டு காலை 10.40 மணிக்கு செங்கல்பட்டை அடையும்.

மூன்றாவது  சிறப்பு ரயில், காஞ்சிபுரத்தில் இருந்து நண்பகல் 12.50 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 2.15 மணிக்கு செங்கல்பட்டை அடையும்.

நான்காவது சிறப்பு மின்சார ரயில், காஞ்சிபுரத்தில் இருந்து மாலை 4.05 மணிக்கு புறப்பட்டு மாலை 4.50 மணிக்கு செங்கல்பட்டை அடையும்.

ஐந்தாவது சிறப்பு ரயில், காஞ்சிபுரத்தில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு மாலை 6.30 மணிக்கு தாம்பரத்தை வந்ததடையும்.

ஆறாவது சிறப்பு ரயில், காஞ்சிபுரத்தில் இருந்து இரவு 7.45 மணிக்கு புறப்பட்டு இரவு 11.40 மணிக்கு சென்னை கடற்கரையை வந்தடையும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல்வரின் தாயுமானவா் திட்டம்: திருவள்ளூா் மாவட்டத்தில் இன்று தொடக்கம்

கூட்டுறவு சங்க உதவியாளா் பணித் தோ்வு: நுழைவுச் சீட்டு வெளியீடு!

சென்னை மாநகராட்சி அரையாண்டு வரி வருவாய் ரூ.1,002 கோடி!

ரூ. 500-க்கு இருதய முழு பரிசோதனை: ஸ்ரீநாராயணி மருத்துவமனையில் புதிய திட்டம்!

திருவண்ணாமலை உழவா் சந்தையில் 27 டன் காய்கறிகள் பழங்கள் விற்பனை: வேளாண் அலுவலா் சுபஸ்ரீ தகவல்

SCROLL FOR NEXT