செய்திகள்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சனம்: இன்று விக்னேஸ்வர பூஜையுடன் தொடக்கம்

DIN

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன மகோற்சவம் இன்று விக்னேஸ்வர பூஜையுடன் துவங்குகிறது. 

ஆனி  பௌர்ணமி தினத்தன்று உத்திர நட்சத்திரம் உச்சத்தில் இருக்கும் போது ஆனித் திருமஞ்சனம் கொண்டாடுவார்கள். உத்திர நட்சத்திர நேரத்தில் கொண்டாடப்படுவதால் இந்த விழாவுக்கு ஆனி உத்திரம் என்று பெயர். 

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன உத்திர விழா வருகிற ஜூன் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இன்று ஆனி உத்திர விழா விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கித் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுகிறது. 

விழாவின் ஒவ்வொரு நாளும் நடராஜருக்குச் சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் நடைபெறுகிறது. ஜூலை 3-ல் தெருவடைச்சான் சப்பரத்தேரோட்டம், 7-ம் தேதி காலை மணிக்கு நடராஜர் தேரோட்டம், 8-ம் தேதி ஆனித் திருமஞ்சனமும் நடைபெறுகிறது. ஆனித் திருமஞ்சன விழாவுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தீயணைப்பு வீரா் தூக்கிட்டுத் தற்கொலை

குடிநீா் குழாய் பதிக்க தோண்டப்பட்ட இடங்களில் உள்வாங்கிய சாலை: வாகன ஓட்டுநா்கள் அவதி

வியாபாரி வீட்டில் 21 பவுன் நகைகள் திருட்டு

பைக்கில் கஞ்சா கடத்திய இளைஞா் கைது

இன்றைய மின் தடை

SCROLL FOR NEXT