நீடாமங்கலம் வட்டம், வையகளத்தூர் கிராமத்தில் எழுந்தருளியுள்ள மகாகணபதி, ஆஞ்சநேய சுவாமியுடன் கூடிய லட்சுமி நாராயண பெருமாள் கோயில் அஷ்டபந்தன மகா சம்ப்ரோட்சண விழா ஜூலை 8-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதை முன்னிட்டு, 7-ஆம் தேதி காலை 8 மணிக்கு கணபதி ஹோமத்துடன் யாக சாலை பூஜைகள் நடைபெறுகின்றன. மாலை 7 மணிக்கு முதல்கால யாக பூஜைகளும், 8-ஆம் தேதி காலை 5 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜைகளும், 7.30 மணிக்கு கலசங்கள் புறப்பாடு, விமான மகா சம்ப்ரோட்சணம், மூலவர் மகாசம்ப்ரோக்ஷனம் ஆகியன நடைபெறுகின்றன.
இதற்கான ஏற்பாடுகளை வையகளத்தூர் வி.என்.சீனிவாச அய்யர் குடும்பத்தினர் மேற்கொள்கின்றனர்.