செய்திகள்

நாகேந்திரனுக்கு நாகாபரணம்

எஸ். வெட்கட்ராமன்

நாகாபரணம் (நாகம்+ஆபரணம்) என்பது இந்து சமயக் கோயில்களில் இறைவனுக்கு அலங்காரம் செய்ய பயன்படும் ஆபரணங்களில் ஒன்றாகும்.

சிவாலயங்களில் பிரதோஷ பூஜைகளில் மற்றும் திருவிழா காலங்களிில், மூலவரான லிங்கத்திருமேணியைச் சுற்றி ஐந்து தலை நாகம் படம் எடுப்பதைப் போன்ற தோற்றத்தில், நாகாபரணம் அணிவிக்கப்படுகிறது.

செம்பு, வெள்ளி, தங்கம் போன்ற உலோகங்களில் நாகாபரணம் செய்யப்படுகிறது.

சர்ப்ப தோஷம் நிவர்த்தி பெற அபிஷேக, அலங்கார, ஆராதனைகளுடன் நாகாபரணம் சார்த்தி வழிபட்டால், பலன் பெறுவது திண்ணம் என்று சிவபூஜா பலன்களாக கூறப்பட்டுள்ளது.

சென்னை மேற்கு தாம்பரம் பேருந்து நிலையத்தின் பின்புறம், மார்கெட் அருகில் பூங்காவில் இருக்கும் மாரியம்மன் கோயிலில், சன்னிதி கொண்டிருக்கும் உமா மகேசுவர லிங்கத்திருமேணிக்கு புதியதாக செய்யப்பட்ட நாகாபரணம் அணிவிக்கப்பட உள்ளது.

இன்று (0303.2019) மாலை நடைபெற உள்ள பிரதோஷ வழிபாட்டிலும், நாளை (04.03.2019) உத்தமமோத்த சோமவார சிவராத்திரி நன்னாளிலும் நாகாபரணத்துடன் பக்தர்கள் ஈஸ்வரனை தரிசிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

நாலுமாவடியில் பெண்களுக்கான இலவச கபடி பயிற்சி முகாம்: மே 9இல் தொடக்கம்

கருட வாகனத்தில் ஸ்ரீமன் நாராயணசுவாமி

கழுகுமலை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை திருட்டு

ஓய்வுபெற்ற அரசு அலுவலா் வீட்டில் 18 பவுன் திருட்டு

SCROLL FOR NEXT