செய்திகள்

நிலத்தடி கருப்பசாமி கோயிலில் சத்யநாராயண பூஜை

தினமணி


பொன்னேரியை அடுத்த தேவதானம் கிராமத்தில் உள்ள நிலத்தடி கருப்பசாமி கோயிலில், உலக நன்மைக்காக சத்யநாராயண பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது. 
இக்கோயில் நிர்வாகி ராஜசேகர சுவாமிகள் தலைமை வகித்து, இந்தபூஜையைத் தொடங்கி வைத்தார். விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் பொதுச் செயலர் கோபால்ஜி  சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். 
கோபூஜையுடன் தொடங்கிய சத்யநாராயண பூஜையைத் தொடர்ந்து, 1008 பெண்கள் கலச வழிபாடு செய்தனர். இந்த வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 
தேவதானம் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் நாகராஜ் உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்றனர்.   பூஜையில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT