செய்திகள்

முத்துப்பந்தல், சிம்ம வாகனங்களில் கோவிந்தராஜப் பெருமாள் வலம்

DIN


திருப்பதியில் உள்ள கோவிந்தராஜர் கோயிலில் நடந்து வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 3-ஆம் நாளான திங்கள்கிழமை காலை சிம்ம வாகனத்தில் பெருமாள் மாடவீதியில் வலம் வந்தார். 
இக்கோயிலில் கடந்த சனிக்கிழமை வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதன் மூன்றாம் நாளான திங்கள்கிழமை காலை 7 மணிமுதல் 8.30 மணி வரை சிம்ம வாகன சேவை நடைபெற்றது. சிம்ம வாகனத்தில் யோக நரசிம்மர் அவதாரத்தில் மாடவீதியில் வலம் வந்த கோவிந்தராஜரை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மதியம், ஸ்ரீதேவி, பூதேவி சமேத கோவிந்தராஜருக்கு ஸ்நபன திருமஞ்சனமும், மாலையில் ஊஞ்சல் சேவையும் நடைபெற்றன.  
இரவு 8 மணிக்கு வெண்மையான முத்துக்களால் அலங்கரிக்கப்பட்ட முத்துப்பந்தல் வாகனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியார்கள் உடன் வர பெருமாள் மாடவீதியில் வலம் வந்தார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் வாகனச் சேவையை தரிசித்து கற்பூர ஆரத்தி அளித்து வணங்கினர்.  வாகனச் சேவையின்போது கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மேலும் கோயில் எதிரில் உள்ள திருக்குளக் கரையில் மாலை வேளையில் கதாகாலட்சேபம், பக்திப் பாடல் கச்சேரி, ஹரிகதை உள்ளிட்ட ஆன்மிக நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. வாகனச் சேவைக்கு முன் ஜீயர்கள் நாலாயிர திவ்ய பிரபந்தப் பாடல்களை பாராயணம் செய்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

”தாலி அணியாத பிரியங்கா காந்தி..” -ம.பி. முதல்வர் விமர்சனம்

நிதி ஒதுக்கீட்டில் தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம்: வைகோ குற்றச்சாட்டு

குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்

இந்தியன் - 2 இசைவெளியீட்டு விழா எப்போது?

4-வது இடத்தில் சிறப்பாக செயல்படும் ஜடேஜா: சிஎஸ்கே பேட்டிங் பயிற்சியாளர்

SCROLL FOR NEXT