செய்திகள்

நாச்சியார் கோலத்தில் வரதர் பவனி

தினமணி

நாச்சியார் கோலத்தில் வரதராஜப் பெருமாள் செவ்வாய்க்கிழமை பவனி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவம் கடந்த 17-ஆம் கொடியேற்றத்துடன் தொடங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது. அவ்வகையில், மூன்றாம் நாளான 19-ஆம் தேதி கருடசேவை உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. தொடர்ந்து, வரதர் அனுமந்தர், சேஷன், சந்திரப் பிரபை வாகனங்களில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். 
பிரம்மோற்சவத்தின் 5-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை காலையில் நாச்சியார் திருக்கோலத்தில் வரதர் எழுந்தருளினார். தொடர்ந்து, தங்கப் பல்லக்கில் மாடவீதிகளில் பவனி வந்தார். வழிநெடுகளிலும் திரளான பக்தர்கள் வரதரின் விசேஷ நாச்சியார் கோலத்தைக் கண்டு, பக்திப் பரவசத்துடன் வழிபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாம் பித்ரோடா ராஜிநாமா!

பாஜகவின் தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்: காங்கிரஸ் அடுக்கடுக்கான புகார்!

வெளியானது 'தலைமைச் செயலகம்' டிரைலர்!

‘நீ ஃபிட் ஆக இல்லை..’ : சாக்‌ஷி அகர்வால் தரும் பதில்!

கடற்கரையில் வாணி போஜன்!

SCROLL FOR NEXT