செய்திகள்

ஜாதகத்தில் குரு எந்த இடத்தில் இருந்தால் என்ன பலன்?

DIN

2019-20ம் ஆண்டுக்கான குருப்பெயர்ச்சி நிகழும் விகாரி வருடம் ஐப்பசி மாதம் 12-ம் நாள், விசாக நட்சத்திரத்தில் அதிகாலை 3.49-க்கு சித்த யோகம், கன்னியா லக்னத்தில் குருபகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு இடப்பெயர்ச்சியடைகிறார்.

கற்றல், கற்றுக் கொடுத்தல் இரண்டையும் சரிவர செய்பவர் குரு. குருவின் ஆசிர்வாதத்தை தான் குருபலன் என்கிறோம். குருவின் பார்வை எதையும் முழுமையாக்கும். எத்தனை தோஷம் இருந்தாலும் அத்தனையையும் ஒழித்து நல்லருள் புரியும். அத்தகைய குரு தரும் பலன்களை தெரிந்து கொள்வோம்.

ஒருவரது ஜாதகத்தில் குரு பகவான் எந்த இடத்தில் இருந்தால் என்ன பலன் என்பதைப் பார்ப்போம்.

* குரு பகவான் 1-ம் இடத்தில் இருந்தால் - நீண்ட ஆயுள், நிறைந்த செல்வம் கிடைக்கும்.

* குரு பகவான் 2-ல் இருந்தால் - பேச்சாற்றல், அரசு வேலை கிடைக்கும்.

* குரு பகவான் 3-ல் இருந்தால் - சகோதர அனுகூலம் உடன் பிறப்புகளால் உதவிக் கிடைக்கும்.

* குரு பகவான் 4-ல் இருந்தால் - தாய் அனுகூலம், வீடு வாகன யோகம் கிடைக்கும்.

* குரு பகவான் 5-ல் இருந்தால் - புத்திர தோஷம், பெண் குழந்தைகள் தோஷம் நீங்கும்.

* குரு பகவான் 6-ல் இருந்தால் - போராட்டமில்லாத வாழ்வு மலரும்.

* குரு பகவான் 7-ல் இருந்தால் - நல்ல வாழ்க்கைத் துணை அமையும்.

* குரு பகவான் 8-ல் இருந்தால் - நீண்ட ஆயுள் உண்டு.

* குரு பகவான் 9-ல் இருந்தால் - அனைத்தையும் அள்ளிக் கொடுப்பார்.

* குரு பகவான் 10-ல் வந்தால் - பதவி மாற்றம் உறுதியாகும்.

* குரு பகவான் 11-ல் இருந்தால் - செல்வாக்கு, செல்வ நிலையில் உயர்வு உண்டு.

* குரு பகவான் 12-ல் இருந்தால் - சுபவிரயம், மங்கள ஓசை, பயணங்கள், பெரிய மனிதர்களின் தொடர்புகள் கிடைக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோயில் பூசாரியை தாக்கி உண்டியல் பணம் கொள்ளை

இஸ்ரேலில் அல் ஜசீரா அலுவலகங்களை மூட முடிவு: அமைச்சரவை ஒப்புதல்

வணிகா் தினம் : ஆம்பூரில் கடைகள் அடைப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

ஜல்ஜீவன் திட்டப் பணிகள்: நகராட்சி நிா்வாக இயக்குநா் ஆய்வு

SCROLL FOR NEXT