செய்திகள்

புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு!

தினமணி


சபரிமலை ஐயப்பன் கோயில் புரட்டாசி மாத பூஜைக்காக நேற்று மாலை நடை திறக்கப்பட்டது. 

கேரள மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் தமிழ் மாத பூஜைகளுக்காக ஒவ்வொரு மாதமும் நடை திறக்கப்பட்டுச் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது.

அதன்படி, இம்மாதம் புரட்டாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடையை, தந்திரி கண்டரரு மகேஷ் மோகனாரு முன்னிலையில் மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நேற்று மாலை 5.00 மணிக்கு திறந்து வைத்தார். 

இரவு 10.00 மணிக்கு கோயில் நடை அடைக்கப்பட்டு, மீண்டும் இன்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம் நடைபெற்றது.

மாலை 6.00 மணிக்கு தீபாராதனை புஷ்பாபிஷேகம் போன்றவை நடைபெறும். சிறப்புப் பூஜைகளுக்கு பின் 21-ம் தேதி இரவு 10.30 மணிக்கு கோயில் நடை அடைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆண்டுதோறும் பாடப்புத்தகங்களை மதிப்பாய்வு செய்ய என்சிஇஆர்டிக்கு கல்வி அமைச்சகம் அறிவுறுத்தல்!

நடிகர் பிரகாஷ்ராஜுக்கு அம்பேத்கர் சுடர் விருது அறிவித்த திருமாவளவன்! | செய்திகள்: சிலவரிகளில் | 29.04.2024

எலக்சன் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

சிவகார்த்திகேயனின் ‘குரங்கு பெடல்’ டிரெய்லர்!

உதகை, கொடைக்கானல் செல்பவர்களுக்கு இ-பாஸ்!

SCROLL FOR NEXT