புரட்டாசி சனிக்கிழமையையொட்டி, அத்திவரதர் தரிசன நிகழ்ச்சி ஆம்பூர் கோதண்டராம சுவாமி கோயிலில் சனிக்கிழமை நடைபெற உள்ளது.
இக்கோயிலில் புரட்டாசி மாத அனைத்து சனிக்கிழமைகளிலும் "திருப்பதியில் ஒரு நாள் தரிசனம்" நிகழ்ச்சியாக திருப்பதி வெங்கடாசலபதி சிலை பக்தர்கள் தரிசனத்துக்காக வைக்கப்படுவது வழக்கம்.
அதேபோல இந்த ஆண்டு திருப்பதி வெங்கடாசலபதியோடு, அத்திவரதர் தரிசன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்திவரதர் சுவாமி சிலை புரட்டாசி சனிக்கிழமைகளில் பக்தர்கள் தரிசனத்துக்காக வைக்கப்படுகிறது.