செய்திகள்

நாளை திருப்பதிக்குச் செல்பவர்கள் இதைக் கவனிக்கவும்!

திருமலை திருப்பதியில் உள்ள ஏழுமலையான் திருக்கோயிலில் செவ்வாய்க்கிழமையான(செப்.23) நாளை

தினமணி


திருமலை திருப்பதியில் உள்ள ஏழுமலையான் திருக்கோயிலில் செவ்வாய்க்கிழமையான(செப்.23) நாளை 5 மணி நேரம் சுவாமி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 

திருமலையில் ஆண்டு முழுவதும் ஏதாவதொரு திருவிழாக்கள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது. இருப்பினும் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வெகு சிறப்பாக நடத்தப்படுகிறது.

அந்தவகையில், செப். 30-ம் தேதி முதல் அக். 8-ம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. அதை முன்னிட்டு அதற்கு முன் வரும் செவ்வாய்க்கிழமைகளில் ஏழுமலையான் கோயில் சுத்தம் செய்யப்படுவது வழக்கம். அதன்படி, நாளை ஏழுமலையான் கோயில் சுத்தம் செய்யப்பட உள்ளது.

அதனால் நாளை காலை 6 மணி முதல் மதியம் 11 மணி வரை ஏழுமலையான் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. சுத்தப்படுத்தும் பணி நிறைவு பெற்றவுடன் பக்தர்கள் ஏழுமலையான் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர். அன்று சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனா உள்ளிட்ட சேவைகள் ஏழுமலையானுக்கு தனிமையில் நடத்தப்பட உள்ளது. 

ஆண்டுக்கு 4 முறை அதாவது வைகுண்ட ஏகாதசி, உகாதி, ஆனி வார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவம் உள்ளிட்ட உற்சவங்களுக்கு முன் ஏழுமலையான் கோயில் சுத்தப்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்து எழுப்பும் வினாக்கள்!

மத்திய பட்ஜெட்: ஒரு பார்வை

ராகுல் பேச்சால் மக்களவையில் கடும் அமளி: நாள் முழுவதும் ஒத்திவைப்பு

ஓட்டுநா் மதிப்பீட்டு முறை: சென்னை ஐஐடி ஒப்பந்தம்

அமெரிக்கா: தமிழக காலநிலை விஞ்ஞானிக்கு ‘கிராஃபூா்ட்’ பரிசு

SCROLL FOR NEXT