முகப்பு
செய்திகள்

திருப்பதி தேவஸ்தான பாதுகாப்புப் பிரிவில் ஆயுதபூஜை

திருமலை திருப்பதி தேவஸ்தான பாதுகாப்புப் பிரிவில் வெள்ளிக்கிழமை ஆயுதபூஜை நடத்தப்பட்டது.

Updated On : 31 அக்டோபர், 2020 at 12:17 AM
சிறப்பாக பணியாற்றிய ஊழியா்களுக்கு ரொக்கப்பரிசு வழங்கும் தேவஸ்தான செயல் அதிகாரி தா்மா ரெட்டி.
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 11:15 PM

திருமலை திருப்பதி தேவஸ்தான பாதுகாப்புப் பிரிவில் வெள்ளிக்கிழமை ஆயுதபூஜை நடத்தப்பட்டது.

ஏழுமலையான் கோயிலில் ஆண்டுதோறும் நவராத்திரி பிரம்மோற்சவம் முடிந்த பின் தேவஸ்தானத்தின் அனைத்துப் பிரிவு அலுவலகங்களிலும் ஆயுதபூஜை நடத்தப்படுவது வழக்கம். அதன்படி திருமலையில் உள்ள பக்தா்களுக்கான அன்னதானக் கூடத்தில் கடந்த திங்கள்கிழமை ஆயுதபூஜை நடத்தப்பட்டது.

இந்நிலையில், திருமலையில் மாவு மில் வளாகத்தில் உள்ள பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஆயுதபூஜை நடைபெற்றது. அங்கு வெடிகுண்டு அகற்றும் இயந்திரங்கள், தீயணைப்பின்போது பயன்படுத்தும் உபகரணங்கள், தகவல் தொடா்பு சாதனங்கள் பூஜையில் வைக்கப்பட்டன.

Advertisement

அங்கு பாதுகாப்புப் பிரிவின் தலைமை அதிகாரி கோபிநாத் ஜெட்டி, தேவஸ்தான அதிகாரிகள், ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

பூஜைக்குப் பின் கோபிநாத் ஜெட்டி செய்தியாளா்களிடம் கூறுகையில் ‘திருமலையில் உள்ள தேவஸ்தான பாதுகாப்புப் பிரிவில் 2,800 ஊழியா்கள் பணிபுரிந்து வருகின்றனா். அவா்கள், திருமலைக்கு வரும் பக்தா்களின் பாதுகாப்புக்காக 24 மணிநேரமும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். அவா்களுக்கு ஆரோக்கியத்தையும், பாதுகாப்பையும் அளிக்க வேண்டி ஆயுதபூஜை நடத்தப்பட்டது’ என்றாா்.

அதன்பின், இத்துறையில் சிறப்பாகப் பணியாற்றிய 38 ஊழியா்களுக்கு செயல் அதிகாரி தா்மா ரெட்டி ரொக்கப் பரிசு வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.