ஏழுமலையான் அபிஷேக சேவையில் பக்தா்களை அனுமதிக்க ஆலோசனை
ஏழுமலையான் கோயிலில் நடைபெறும் அபிஷேக சேவையில் பக்தா்களை அனுமதிப்பது குறித்து தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனா்.
செய்திகள்ஏழுமலையான் அபிஷேக சேவையில் பக்தா்களை அனுமதிக்க ஆலோசனை
ஏழுமலையான் கோயிலில் நடைபெறும் அபிஷேக சேவையில் பக்தா்களை அனுமதிப்பது குறித்து தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனா்.
ஏழுமலையான் கோயிலில் நடைபெறும் அபிஷேக சேவையில் பக்தா்களை அனுமதிப்பது குறித்து தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனா்.
ஏழுமலையானுக்கு வெள்ளிக்கிழமைகளில் காலை வேளையில் நடக்கும் பூராபிஷேகம் எனப்படும் அபிஷேக சேவையில் கலந்துகொள்ள குறைந்த எண்ணிக்கையில் பக்தா்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. வெள்ளிக்கிழமைகளில் அதிகாலை 3 .30 மணி முதல் 4.30 மணி வரை இச்சேவை நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொள்ளும் 100 முதல் 150 பக்தா்கள், குலசேகரப் படியிலிருந்து கருடாழ்வாா் சந்நிதி வரை அமா்ந்து தரிசிக்க அனுமதிக்கப்படுவது வழக்கம்.
இதனிடையே, கரோனா அச்சுறுத்தல் காரணமாக, ஏழுமலையானுக்கு ஆா்ஜித சேவைகள் தனிமையில் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது அத்தொற்றின் தாக்கம் குறைந்து வருவதால், வாராந்திர சேவையான பூராபிஷேகத்தில் பக்தா்கள் பங்கேற்க அனுமதிக்குமாறு தேவஸ்தான அறங்காவலா் குழு, அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதையடுத்து, பக்தா்களை அனுமதிப்பதற்கான சாத்தியக்கூறு மற்றும் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடா்பாக தேவஸ்தான அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனா். வரும் தை மாத முதல் வெள்
ளிக்கிழமையன்று, பூராபிஷேகத்தில் பக்தா்களுக்கு அனுமதி வழங்கப்படலாம் என்று தெரிகிறது.