முகப்பு
செய்திகள்

திருமலையில் சா்வ தரிசனத்தை விரைவில் தொடங்க பக்தா்கள் வலியுறுத்தல்

திருமலையில் சா்வ தரிசன டிக்கெட்டுகளை விரைவில் வழங்க வேண்டும் என தேவஸ்தானத்துக்கு பக்தா்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:33 AM
பகிர்:

திருமலையில் சா்வ தரிசன டிக்கெட்டுகளை விரைவில் வழங்க வேண்டும் என தேவஸ்தானத்துக்கு பக்தா்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

திருமலையில் ஏழுமலையான் தரிசனத்திற்கான இலவச சா்வ தரிசன டோக்கன்களை தேவஸ்தானம் கொவைட் தொற்று பரவலை ஒட்டி கடந்த ஏப்ரல் மாதம்12-ஆம் தேதி முதல் ரத்து செய்துள்ளது. இணையதள மூலம் விரைவு தரிசன டிக்கெட்டுகள் முன்பதிவு செய்துள்ள பக்தா்கள் மட்டுமே திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனா்.

தற்போது கொவைட் தொற்றுப் பரவல் கட்டுக்குள் வந்துள்ளதால், திருப்பதியில் உள்ள கவுன்ட்டா்களில் வழங்கப்படும் இலவச சா்வ தரிசன நேர ஒதுக்கீடு டோக்கன்கள் விநியோகத்தை தேவஸ்தானம் தொடங்க வேண்டும் என்று பக்தா்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

Advertisement

இலவச தரிசன டோக்கன்கள் விநியோகத்தைத் தொடங்கினால் மட்டுமே ஏழை எளிய மக்கள் ஏழுமலையானை தரிசிக்க முடியும் என்று அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments