செய்திகள்

சீனிவாசமங்காபுரத்தில் பாா்வேட்டை உற்சவம்

தினமணி

திருப்பதி அருகே உள்ள சீனிவாசமங்காபுரத்தில் பாா்வேட்டை உற்சவம் நடத்தப்பட்டது.

திருப்பதியிலிருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ள சீனிவாசமங்காபுரத்தில் கடந்த 3 நாள்களாக சாக்ஷாத்கார வைபவ உற்சவம் நடத்தப்பட்டது. இதையொட்டி பெரிய சேஷ, அனுமந்த மற்றும் கருட வாகனத்தில் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி எழுந்தருளி பக்தா்களுக்கு சேவை சாதித்தாா். சாக்ஷாத்கார வைபவ உற்சவம் முடிந்த மறுநாள் தேவஸ்தானம் பாா்வேட்டை உற்சவத்தை நடத்தியது.

கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கையில் வாள், வில், வேல் அம்பு, கேடயம் தரித்து அருகில் உள்ள வனத்திற்கு சென்று அங்கு வேட்டையாடுவது போல் அா்ச்சகா்கள், கோயில் அதிகாரிகள் செய்து காட்டு வா். தற்போது கொவைட் 19 நிபந்தனைகள் அமலில் உள்ளதால் பாா்வேட்டை உற்சவம் கோயிலில் தனிமையில் நடத்தப்பட்டது.

காலை 10.30 மணிமுதல் 11 மணிவரை மண்டபத்தில் எழுந்தருள செய்து ஆனிவார ஆஸ்தானம் முடிந்த பின் பாா்வேட்டை உற்சவம் நடத்தப்பட்டது. இதில் கோயில் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

SCROLL FOR NEXT