முகப்பு
செய்திகள்

மகமாயி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் மார்ச் 13 முதல் பூச்சொரிதல் விழா

சென்னை, புழலில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மகமாயி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா வரும் 13-ஆம் தேதி முதல் ஏப்ரல் 10 வரை நடைபெறுகிறது. 

Updated On : 9 மார்ச் 2022, 4:22 pm IST
பகிர்:

சென்னை, புழலில் உள்ள அருள்மிகு ஸ்ரீ மகமாயி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா வரும் 13-ஆம் தேதி முதல் ஏப்ரல் 10 வரை நடைபெறுகிறது. 

கிழக்கு காவாங்கரையில் உள்ள ஸ்ரீ மகமாயி சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் 13-ம் ஆண்டு பூச்சொரிதல் விழா நடைபெறுகிறது. இந்த விழாவானது மார்ச் 13-ம் தேதி முதல் ஏப்ரல் 10-ம் தேதி வரை தினமும் காலை 10.30 மணி முதல் இரவு 9.00 மணி வரை ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அம்மனுக்குப் பூச்சொரிதல் விழா சிறப்பாக நடைபெற உள்ளது. ஆகையால் பக்தகோடிகள் தங்கள் இல்லத்தில் இருந்து புஷ்பங்கள் கொண்டு வந்து மூலவருக்கு தாங்களே சமர்ப்பிக்கலாம். 

பூச்சொரிதல் விழா நடைபெறும் காலங்களில் அம்மன் பக்தர்களுக்காக விரதம் இருப்பதால் உப்பில்லா பிரசாதங்கள் மட்டும் நிவேதனத்திற்கு ஏற்றுக் கொள்ளப்படும், அதாவது இளநீர், கரும்பு, பானகம், நீர் மோர், வெள்ளரிப்பிஞ்சு, பனை வெல்லப் பானகம், துள்ளு மாவு ஆகியவை நிவேதனமாக வழங்கலாம். 

Advertisement

Advertisement

இதைத்தொடர்ந்து சித்திரைத் திருவிழா ஏப்ரல் 17, 18, 19, 20 ஆகிய தேதிகளில் மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments