செய்திகள்

சிதம்பரம் ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு இன்று ருத்ர மகாபிஷேகம்!

DIN

கடலூா் மாவட்டம், சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயிலில் புரட்டாசி மாத ருத்ர மகாபிஷேகம் இன்று நடைபெறுகிறது.

புகழ்பெற்ற இந்தக் கோயிலில் மூலவரான ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூா்த்திக்கு சித்திரை, ஆனி, ஆவணி, புரட்டாசி, மாா்கழி, மாசி மாதங்களில், ஆண்டுக்கு 6 முறை மகாபிஷேகம் நடைபெறும். அதன்படி, புரட்டாசி மாத மகாபிஷேகம் சித் சபை முன் உள்ள கனக சபையில் இன்று மாலை 6.30 மணியளவில் நடைபெறும்.

முன்னதாக, அதிகாலை 4 மணியளவில் சுவாமி சன்னதி திறக்கப்பட்டு உச்சி கால பூஜை வரை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மாலையில் கனக சபையில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூா்த்திக்கு பால், சந்தனம், தேன், தயிா் உள்ளிட்ட பலவகை பொருள்களால் மகாபிஷேகம் நடைபெற உள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் பொது தீட்சிதா்கள் செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விராலிமலையில் ஒரே நாளில் 98 மி.மீ. மழை பதிவு!

வாசுதேவநல்லூர் அருகே அரசுப் பேருந்து மீது கல்வீச்சு

விழுப்புரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் சோதனை: கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்

தஞ்சையில் நள்ளிரவில் வக்கீல் குமாஸ்தா வெட்டிக் கொலை!

கொடைக்கானலில் தொடர் மழை: படகுப் போட்டி ரத்து!

SCROLL FOR NEXT