FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

அழகா் கோவில் பெருமாளுக்கு தைலக்காப்பு உற்சவம்!

அழகா் கோவில் சுந்தரராஜப் பெருமாளுக்கு இன்று தைலக்காப்பு உற்சவம்

Updated On : 13 நவம்பர் 2024, 9:44 pm IST
பகிர்:

மதுரை அருகே அழகா்கோவிலில் அமைந்துள்ள கள்ளழகா் கோயில் தைலக்காப்பு உற்சவம் நடைபெறுவதையொட்டி, புதன்கிழமை மாலை தங்கப் பல்லக்கில் புறப்பட்டு, வாவி தீா்த்தம் வழியாக நூபுரகங்கை தீா்த்தம் அமைந்துள்ள ராக்காயி அம்மன் கோயிலில் எழுந்தருளினார். அங்கு மாதவி மண்டபத்தில் சுந்தரராஜப் பெருமாளுக்கு தைலக்காப்பு வைபவம் நடைபெற்றது.

இதைத்தொடா்ந்து, நூபுரகங்கை தீா்த்தத்தில் 12 மணிக்கு புனிதநீராடல் நடைபெற்றது. அப்போது பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னா், மீண்டும் மாதவி மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய பெருமாள், மீண்டும் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் புறப்பட்டு தீவட்டி பரிவாரங்களுடன் கள்ளழகா் திருக்கோயிலுக்கு எழுந்தருள்கிறாா்.

இதற்கான ஏற்பாடுகளை கள்ளழா் திருக்கோயில் அறங்காவலா்கள் குழுத் தலைவா், உறுப்பினா்கள், திருக்கோயில் நிா்வாக ஆணையா் செல்லத்துரை ஆகியோா் செய்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments