செய்திகள்

கங்காதர ஈஸ்வர கோயிலில் தேரோட்டத் திருவிழா!

ஆற்காட்டில் கங்காதரேஸ்வரர் ஆலய தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது.

DIN

ஆற்காட்டில் பல ஆண்டுகள் பழமையான கங்காதர ஈஸ்வர ஆலயத்தில் தேரோட்டத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகே, மிகவும் பழமை வாய்ந்த அருள்மிகு கங்காதரேஸ்வரர் வரதராஜ பெருமாள் ஆலயத்தில் பிரம்மோற்சவம் கடந்த 30ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பிரம்மோற்சவ நிகழ்வின் இறுதியாக தேரோட்டத் திருவிழா இன்று நடைபெற்றது. முன்னதாக வண்ண மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்ட உற்சவருக்கு மேளதாளம் முழங்கச் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

தொடர்ந்து சுவாமியைப் பக்தர்கள் தோளில் சுமந்தபடி தூக்கிவரப்பட்டு திருத்தேரில் வைத்து, தீபாராதனை காட்டிய பின்பு, பக்தர்கள் தேரினை வடம் பிடித்து அரோகரா அரோகரா கோஷத்துடன் இழுத்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! மீனாட்சியம்மன் கோயிலில் ஐந்து நடராஜர் தரிசனம்

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

வாணியம்பாடியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

SCROLL FOR NEXT