செய்திகள்

நெல்லையப்பர் திருக்கோயிலில் சிறப்பு வழிபாடு!

நெல்லையப்பர் திருக்கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாடு

DIN

புத்தாண்டையொட்டி நெல்லை நெல்லையப்பர் திருக்கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாடு திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

2025 புத்தாண்டை வரவேற்கும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. நெல்லை மாவட்டத்திலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. அந்தவகையில் நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் சிறப்புப் பூஜைகள் மற்றும் வழிபாடுகள் காலை முதல் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லையப்பர் திருக்கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு திருவனந்தல் வழிபாடு, கஜ பூஜை, கோபூஜை உள்ளிட்டவைகள் நடத்தப்பட்டது. தொடர்ந்து நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். புத்தாண்டு நல்லபடியாக அமைய வேண்டும் வரும் காலங்களில் அனைத்தும் சிறப்பாக இருக்க வேண்டும் எனப் பிரார்த்தனை செய்து வழிபாட்டை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா - பாக். போரில் நான் இல்லையென்றால் 3.5 கோடி மக்கள் இறந்திருப்பர்: டிரம்ப்

காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ் வலியுறுத்தல்

எங்கள் கூட்டணியில் ‘வெய்ட் அண்ட் ஸீ’ நிலைமை எதுவும் இல்லை: தமிழிசை

ஆரோவில் சா்வதேச நகரில் இரண்டாவது உலக ஆன்மிக மகோத்ஸவம்: பிரதமா் நரேந்திர மோடி தொடங்கிவைக்கிறாா்

சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி விதிப்பா?

SCROLL FOR NEXT