மாசித் திருவிழா தேரோட்டம் 
செய்திகள்

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் மாசித் தேரோட்டம்!

மாசி பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் இன்று சிறப்பாக நடைபெற்றது.

DIN

விழுப்புரத்தில் பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மாசித் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

இந்த கோயிலில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரியில் இருந்து 13 நாள்கள் மாசி பெருவிழா சிறப்பாக நடத்தப்படுகிறது. அந்தவகையில் இந்தாண்டு மாசி பெருவிழா பிப்.26 கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி விழாவின் சிகர நிகழ்ச்சியான மயானக்கொள்ளை விழா கடந்த வாரம் நடைபெற்றது.

மாசி பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று தேரோட்டம் நடைபெற்றது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு பக்தி பரவசத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

தேரோட்ட நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என்பதால் இன்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரேஸ்கோா்ஸில் நாளை மின் நுகா்வோா் குறைகேட்புக் கூட்டம்

கதண்டுகள் கடித்து தொழிலாளா்கள் காயம்

தீபாவளி: தஞ்சை மாநகரில் 800 கேமராக்கள் மூலம் கண்காணிப்பு

முக்காணி பாலத்தை விரைந்து சீரமைக்க வலியுறுத்தல்

விவசாய நிலப் பாதை ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி ஆட்சியரிடம் மனு

SCROLL FOR NEXT