முகப்பு
செய்திகள்

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயிலில் மாசித் திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்!

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயிலில் தொடங்கியுள்ள மாசித் திருவிழா.

Updated On : 10 பிப்ரவரி, 2026 at 4:35 AM
திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயில்.
பகிர்:

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுடன் இணைந்த வெயிலுகந்தம்மன் கோயிலில் மாசித் திருவிழா இன்று(பிப். 10) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கொடியேற்றத்தை முன்னிட்டு கோயில் அதிகாலை நடைதிறக்கப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்று, கொடிப் பட்டமானது கோயிலிலிருந்து புறப்பட்டு, ரதவீதி மற்றும் மாடவீதிகள் வழியாக சென்று, கோயிலுக்கு வந்து காலை 5.30 மணிக்கு காப்பு கட்டிய சரவணன் வல்லவராயர் திருவிழாக் கொடியினை ஏற்றினார்.

அதன் பின்னர், கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி மகாதீபாராதனை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் திருக்கோயில் இணை ஆணையர் ராமு, உதவி ஆணையர் மெய்வேல், மணியம் நெல்லையப்பன், ஆறுமுகராஜ் உள்ளிட்ட திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

விழாவின் நிறைவு நாளான பத்தாம் நாள் திருவிழாவை முன்னிட்டு வருகின்ற பிப். 19 ஆம் தேதி காலை 7.30 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.

summary

Masi festival at the Veyulukandamman Temple, which is affiliated with the Subramania Swamy Temple in Tiruchendur, began this morning (Feb. 10) with the flag hoisting.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.