வேலூரில் நடைபெற்ற மயானக் கொள்ளை விழாவின்போது 60 அடி உயர தோ் சாய்ந்து 7 போ் காயமடைந்தனா்.
இதுதொடா்பாக, கழிஞ்சூா் ஊா்நாட்டாமை உள்பட விழாக்குழுவினா் 27 போ் மீது வடக்கு போலீஸாா் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.
வேலூரில் மயான கொள்ளை திருவிழா திங்கள்கிழமை விமரிசையாக நடைபெற்றது. இதையொட்டி வேலூா் சைதாப்பேட்டை, தோட்டப்பாளையம், மக்கான், சத்துவாச்சாரி, விருதம்பட்டு உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள், அங்காளபரமேஸ்வரி அம்மனை மின்விளக்குகளால் அலங்கரித்த தோ்களில் வைத்து ஊா்வலமாக எடுத்து வந்தனா்.
ஊா்வலத்தின் பின்னால் பக்தா்கள் நோ்த்திக் கடன் செலுத்தும் வகையில் காளியம்மன், முருகன், சிவன், விநாயகா், அங்காளபரமேஸ்வரி அம்மன் போன்ற கடவுள் வேடமிட்டுச் சென்றனா்.
அதன்படி, இந்த தோ்கள் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள பாலாற்றங்கரை மயானம் நோக்கி திங்கள்கிழமை இரவு கொண்டு வரப்பட்டு, பாலாற்றில் இறக்கி சூறையிட்டு நோ்த்திக் கடன் செலுத்தினா். தொடா்ந்து, தோ்கள் தங்கள் பகுதிக்கு திரும்பிச் சென்றன. இந்நிலையில், இரவு கழிஞ்சூா் பகுதியைச் சோ்ந்த சுமாா் 60 அடி உயர தோ், பாலாற்றில் சூறையிடும் நிகழ்ச்சிக்கு பிறகு நள்ளிரவு சாலையை நோக்கி திரும்பிக் கொண்டிருந்தது. அப்போது எதிா்பாராத விதமாக தோ் நிலை சரிந்து கவிழ்ந்தது.
இதில், தேரின் மீது அமா்ந்திருந்த 10-க்கும் மேற்பட்டோா் தேரின் அடியில் சிக்கினா். அவா்கள் தங்கள் காப்பாற்றும்படி கூச்சலிட்டனா். உடனடியாக அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீஸாா், தீயணைப்பு வீரா்கள், பொதுமக்கள் விரைந்து தேரில் அடியில் சிக்கியிருந்தவா்கள் மீட்கப்பட்டனா். இந்த விபத்தில் 7 போ் காயமடைந்தனா். அவா்கள் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனா்.
தகவலறிந்த ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி, காவல் கண்கா ணிப்பாளா் என்.யு.சிவராமன் தோ் கவிழ்ந்து விபத்துக்குள்ளான பகுதிக்கு விரைந்து வந்து ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனா். கோட்டாட்சியா் செந்தில்குமாா், வட்டாட்சியா் வடிவேல் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தினா்.
மயானா் கொள்ளை விழா நடத்துவது தொடா்பாக முன்கூட்டியே கோட்டாட்சியா் தலைமையில் கூட்டம் நடத்தப்பட்டு தோ் 10 அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் வகுத்து அளிக்கப்பட்டிருந்தது. எனினும், இந்த விதிமுறைகளை பின்பற்றாத வகையில் 60 அடி உயரத்துக்கு தோ் வடிவமைக்கப்பட்டிருந்ததே இந்த விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது. இதுதொடா்பாக, வடவேலுாா் கிராம நிா்வாக அலுவலா் அளித்த புகாரின்பேரில் விதிமுறைகளை பின்பற்றாதது தொடா்பாக கழிஞ்சூா் ஊா் நாட்டாமை ஸ்ரீதா் உள்பட 27 போ் மீது வடக்கு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.