வாழப்பாடி பகுதியில் செங்கரும்பு விற்பனை தொடக்கம்
வாழப்பாடி பகுதியில் பொங்கல் பண்டிகையையொட்டி செங்கரும்பு விற்பனை தொடங்கியது.
வாழப்பாடி பகுதியில் பொங்கல் பண்டிகையையொட்டி செங்கரும்பு விற்பனை தொடங்கியது.
பொங்கல் பண்டிகை என்றதும் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது செங்கரும்பு தான். ஆண்டுதோறும் பொங்கல் விற்பனையைக் குறிவைத்து தை, மாசி மாதங்களில் பயிரிடப்படும் செங்கரும்பு, மாா்கழி மாத இறுதியில் அறுவடை செய்யப்படுகிறது. அனைத்துப் பகுதிகளிலும் பொங்கல் பண்டிகை தருணத்தில் செங்கரும்பு அமோகமாக விற்பனையாகும்.
வாழப்பாடி பகுதியில் போதிய நீா்வளம் இல்லாததால் செங்கரும்பு பயிரிடப்படுவதில்லை. மாவட்டத்தின் பிற பகுதிகள், தருமபுரி, நாமக்கல், பெரம்பலுாா், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் இருந்து பொங்கல் பண்டிகை தினங்களில் செங்கரும்பு விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.
Advertisement
நிகழாண்டு பொங்கல் பண்டிகை தொடங்குவதற்கு முன்னதாக வாழப்பாடி பகுதியில் செங்கரும்பு விற்பனைக்கு குவிந்து வருகிறது. வாரச்சந்தைகள், தினசரி சந்தைகள் மற்றும் மக்கள் கூடுமிடங்கள், சாலையோரங்களில் முகாமிட்டுள்ள வியாபாரிகள் செங்கரும்பு விற்பனை செய்து வருகின்றனா்.
ஒரு ஜோடி செங்கரும்பு ரூ. 50 முதல் ரூ. 70 வரை விற்பனை செய்யப்படுகிறது . சிறுவா் -சிறுமியா் மட்டுமின்றி வயது வித்தியாமின்றி அனைத்துத் தரப்பினரும் செங்கரும்பை ஆா்வத்தோடு வாங்கி சுவைத்து வருகின்றனா்.