திருவொற்றியூர் பேருந்து நிலையத்துக்கு பின்புறம் அமைந்துள்ள சுரங்கப்பாதையில் தேங்கும் கழிவுநீரை அகற்றுவது குறித்தும், இந்தப் பகுதியில் உள்ள ரேஷன் கடையை இடமாற்றம் செய்வது தொடர்பாகவும் தினமணி ஆராய்ச்சிமணி பகுதியில் செய்தி வெளியானது. இதையடுத்து இக்குறைகளை நீக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆவன செய்தனர். தினமணிக்கும், அரசு அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் சார்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.