ஆராய்ச்சிமணி

இந்து சமய அறநிலையத்துறை கவனத்துக்கு...

DIN

சென்னை சூளையில் அமைந்துள்ள அங்காளம்மன் கோயிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். திருமணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக இங்கு வந்து செல்லும் பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் காலணிகளை பாதுகாத்தல், கழிப்பறை வசதி, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்து தருவதில்லை. கோயிலில் நிகழ்ச்சிகளுக்குண்டான பணத்தைச் செலுத்தி ரசீது பெற்றுக் கொண்டாலும் இங்குள்ள ஊழியர்களுக்குத் தனியாக ஒரு பெரும்தொகை தர வேண்டியுள்ளது. தொகை தராவிட்டால் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கிடையாது. இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோதை ஜெயராமன், மீஞ்சூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அந்த பசிபிக் கடலோரம்..!

பல்ராம்பூர் தேவி கோயிலில் முதல்வர் யோகி வழிபாடு!

வங்கதேச எம்.பி. கொலை: கொல்கத்தா குடியிருப்பிலிருந்து பெரிய பையுடன் வெளியேறிய இருவர்?

புஷ்பா - 2 இரண்டாவது பாடல்!

ஹரியாணாவின் 10 தொகுதிகள்: காற்று வீசுவது யார் பக்கம்?

SCROLL FOR NEXT