கோட்டூர்புரத்தில் இருந்து அம்பத்தூர் எஸ்டேட் வரை இயக்கப்பட்ட 47சி பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும்.
கிண்டி ஆளுநர் மாளிகை, அதன் எதிரேயுள்ள பொதுப்பணித் துறை அலுவலகம், அண்ணா பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், ஐ.ஐ.டி., தகவல் மையம், பிர்லா கோளரங்கம் என மத்திய மற்றும் மாநில அரசுத் துறைகளைச் சேர்ந்த பணியாளர்கள் இந்த பேருந்தில் பயணம் செய்தனர்.
அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு சிகிச்சை பெறுவதற்காக அந்தப் பேருந்தில் நோயாளிகளும் பயணித்தனர்.
இப்போது 47சி பேருந்து சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால், பயணிகள் மிகவும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர் எனவே, மீண்டும் 47சி பேருந்தை இயக்க வேண்டும்.
முத்தமிழ், கிண்டி.