சென்னை தியாகராயநகர் விஜயராகவன் சாலையில் கடந்த ஆண்டு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியால் திறந்து வைக்கப்பட்ட அம்மா குடிநீர் மையம் பல மாதங்களாக போதிய பராமரிப்பு இன்றி பூட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த சுமார் 3 ஆயிரம் குடும்பங்கள் குடிநீர் வசதியின்றி சிரமத்துக்குள்ளாகி உள்ளனர். மாநகராட்சி விரைவில் குடிநீர் மையத்தை திறந்து குடிநீர் வழங்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
படம்: பி.ராதாகிருஷ்ணன்.