கடந்த 20.8.2018 அன்று தினமணி ஆராய்ச்சி மணி பகுதியில் "கால்வாய் தூர்வாரப் படுமா?' என்ற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக, வில்லிவாக்கம் ஐசிஎப்-இல் இருந்து ரயில் நிலையம் செல்லும் சாலையின் இடதுபக்க கால்வாய் உடனடியாகத் தூர்வாரப்பட்டு, சாலையோரம் கொட்டப்பட்டிருந்த குப்பைகளும் அகற்றப்பட்டன.
மக்களின் பிரச்னையை எதிரொலித்த தினமணி நாளிதழ் மற்றும் நடவடிக்கை எடுத்த மாநகராட்சி மண்டலம் 8-இன் அதிகாரிகள், ஊழியர்களுக்கு பாராட்டுகள்.
-வழக்குரைஞர் எஸ். பழனி,
அண்ணா நகர் கிழக்கு, சென்னை-102.