ஆவடி மாநகராட்சி ஜே.பி.எஸ்டேட், சரஸ்வதி நகர் குடியிருப்பு பகுதிகளில் ஆயிரக்கணக்கானோர் வசிக்கின்றனர். இப்பகுதிகளில், வீடுகளில் சேரக்கூடிய குப்பைகளை கொட்டும் வகையில், டம்பர் பிளேசர் எனப்படும் குப்பை தொட்டி வைக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் குப்பைகளைக் கொட்ட வழியின்றி, வீடுகளில் 2, 3 நாள்களுக்கு சேர்த்து வைத்து அருகேயுள்ள ரெமி தியேட்டரில் கொட்டக்கூடிய நிலை தொடருகிறது. எனவே, ஆவடி மாநகராட்சி நிர்வாகம் குப்பை தொட்டிகளை வைக்க வேண்டும்.
எஸ்.வைத்தியநாதன், ஆவடி.