ஆவடி ரயில் நிலையத்தில் வேலூரில் இருந்து காலை 6 மணிக்கும் அரக்கோணத்தில் இருந்து காலை 6.40, 7.50 மணிக்கும் திருவள்ளூரில் இருந்து காலை 8.15, 9.25 மணிக்கும் புறப்படும் விரைவு ரயில்கள் நிற்பதில்லை. அதேபோல, சென்னையில் இருந்து திருப்பதிக்குச் செல்லும் காலை 9.50, இரவு 7.10 மணி ரயில்களும் வேலூருக்கு மாலை 6 மணிக்குப் புறப்படும் ரயிலும் அரக்கோணத்துக்கு காலை 5.30, மதியம் 1.10, மாலை 5.45, இரவு 7.30, 8.10 ஆகிய நேரங்களில் புறப்படும் ரயில்களும் நிற்பதில்லை. இந்த விரைவு ரயில்கள் ஆவடியில் நிற்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆர். வெங்கடகிருஷ்ணன், கோவில்பதாகை.