பழனித் திருப்புகழான இன்றைய பாடல் உபதேசித்து அருளவேண்டும் என்று இறைவனைக் கோருகிறது.
அமைப்பு முறையில் அடிக்கு ஒற்று நீக்கி 22 எழுத்துகள்; தொங்கல் சீரைத் தவிர்த்து மற்ற அனைத்து சீர்களிலும் குறில் பயில்கிறது; ஒற்று சேர்த்தால் ஒவ்வொரு சீரிலும் நான்காவது எழுத்து வல்லின மெய். பாடலைப் பார்ப்போம்.
தனனத் தனனத் தனனத் தனனத்
தனனத் தனனத் - தனதான
புடைசெப் பெனமுத் தணிகச் சறவுட்
பொருமிக் கலசத் - திணையாய
புளகக் களபக் கெருவத தனமெய்ப்
புணரத் தலையிட் - டமரேசெய்
அடைவிற் றினமுற் றவசப் படுமெற்
கறிவி பதடிக் - கவமான
அசடற் குயர்வொப் பதில்நற் க்ருபையுற்
றடிமைக் கொருசொற் - புகல்வாயே
குடமொத் தகடக் கரடக் கலுழிக்
குணமெய்க் களிறுக் - கிளையோனே
குடிபுக் கிடமிட் டசுரப் படையைக்
குறுகித் தகரப் - பொரும்வேலா
படலைச் செறிநற் கதலிக் குலையிற்
பழமுற் றொழுகப் - புனல்சேர்நீள்
பழனக் கரையிற் கழைமுத் துகுநற்
பழநிக் குமரப் பெருமாளே.