தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 754

ஹரி கிருஷ்ணன்

பிறவித் துன்பம் அறவேண்டும் என்று கோரும் இப்பாடல் ஆய்க்குடிக்கானது.  கொங்கு நாட்டிலும் ஒரு ஆய்க்குடி இருந்தாலும் இப்பாடலில் குறிக்கப்படும் தலம் தென்காசிக்கு அருகே உள்ளது.

அடிக்கு ஒற்றொழித்து 25 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் ஒரு நெடில், இரண்டு குறில், இரண்டு (கணக்கில் சேராத) வல்லொற்றுகளும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களில் ஒரு நெடிலோடு தொடங்கும் நான்கெழுத்துகளும் அமைந்துள்ளன.


தாத்தனத் தானதன தாத்தனத் தானதன
                தாத்தனத் தானதன தனதான

வாட்படச் சேனைபட வோட்டியொட் டாரையிறு
                        மாப்புடைத் தாளரசர் பெருவாழ்வும்

மாத்திரை போதிலிடு காட்டினிற் போமெனஇல்
                        வாழ்க்கைவிட் டேறுமடி யவர்போலக்

கோட்படப் பாதமலர் பார்த்திளைப் பாறவினை
                        கோத்தமெய்க் கோலமுடன் வெகுரூபக்

கோப்புடைத் தாகியல மாப்பினிற் பாரிவரு
                        கூத்தினைப் பூரையிட அமையாதோ

தாட்படக் கோபவிஷ பாப்பினிற் பாலன்மிசை
                        சாய்த்தொடுப் பாரவுநிள் கழல்தாவிச்

சாற்றுமக் கோரவுரு கூற்றுதைத் தார்மவுலி
                        தாழ்க்கவஜ் ராயுதனு மிமையோரும்

ஆட்படச் சாமபர மேட்டியைக் காவலிடு
                        மாய்க்குடி காவலவு ததிமீதே

ஆர்க்குமத் தானவரை வேற்கரத் தால்வரையை
                        ஆர்ப்பெழச் சாடவல பெருமாளே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று எந்தெந்த மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்!

சட்டவிரோதமாக அழைத்துச் செல்லப்பட்ட 95 குழந்தைகள் அயோத்தியில் மீட்பு

ராஞ்சியில் பள்ளி பேருந்து கவிழ்ந்து 15 மாணவர்கள் காயம்!

மணிப்பூரில் வன்முறை: 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழப்பு

ஈரோட்டில் மரக்கடை, பர்னிச்சர் கடையில் தீ: ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்

SCROLL FOR NEXT