தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 849

ஹரி கிருஷ்ணன்

பதச் சேதம்

சொற் பொருள்

மனை மக்கள் சுற்றம்என்னும் மாயா

 

 

வலையை கடக்கஅறியாதே

 

 

வினையில் செருக்கிஅடி நாயேன்

 

 

விழலுக்கு இறைத்துவிடலாமோ

 

 

சுனையை கலக்கிவிளையாடும்

 

 

சொருப குறத்திமணவாளா

 

 

தினம் நல் சரித்திரம்உ(ள்)ள தேவர்

 

 

சிறை வெட்டி விட்டபெருமாளே.

 

 

மனைமக்கள் சுற்றம் எனுமாயா வலையைக் கடக்க அறியாதே... மனைவி, பிள்ளைகள், சுற்றத்தார் எனப்படுவதான மாய வலையிலிருந்து விடுபடத் தெரியாமல்,

வினையிற்செ ருக்கி யடிநாயேன் விழலுக்கு இறைத்து விடலாமோ... என் செயல்களிலே பெருமிதம் அடைந்து, நாயினும் கடையேனாகிய நான் (என் வாழ்நாளை) விழலுக்கு இறைத்ததாக வீணில் கழித்துவிடும் இச்செயல் நன்றோ? (வீணே கழியாமல் காத்தருள வேண்டும்.)

சுனையைக்கலக்கி விளையாடு சொருபக்கு றத்தி மணவாளா... சுனையிலே இறங்கி அதைக் கலக்கி விளையாடும் அழகியாம் வள்ளிக் குறத்தியின் மணாளனே!

தினநற்ச ரித்ர முளதேவர் சிறைவெட்டி விட்ட பெருமாளே....எப்போது நல்ல நெறியிலே செல்பவர்களான தேவர்களுடைய சிறையை ஒழித்து அவர்களைச் சிறைவீடு செய்த பெருமாளே!

சுருக்க உரை

சுனையில் இறங்கி நீந்திக் களித்து அதைக் கலக்கி விளையாடுகின்ற குறமகளும் அழகியுமான வள்ளியின் மணாளா!  நல்லொழுக்கம் கொண்ட தேவர்களைச் சிறையிலிருந்து விடுவித்த பெருமாளே!

மனைவி, மக்கள், சுற்றம் என்கின்ற மாய வலையிலிருந்து விடுபடத் தெரியாத அடியேன்; என் செயல்களிலே பெருமிதம் கொண்டு மயங்கி நிற்கும் கீழான நாயைப் போன்ற அடியேன் என் வாழ்நாட்களையெல்லாம் வீண் நாட்களாகக் கழிப்பது நன்றோ?  (என் வாழ்நாள் வீணே கழியாமல் காத்தருள வேண்டும்.)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் பாரதிதாசனுக்கு மணிமண்டபம்: பேரன் இளமுருகன் முதல்வருக்கு கோரிக்கை

‘மகசூல் அதிகரிக்க பசுந்தாள் உரம் அவசியம்’

முதியவா் சாவில் மா்மம்: காவல் நிலையத்தில் மருமகள் புகாா்

கோயில்களில் அறங்காவலா்களை நியமிக்க மேலும் 6 மாத அவகாசம் தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி

சிறப்பு ஒலிம்பிக்- பாரத் கூட்டமைப்பு நிா்வாகிகள் தோ்வு

SCROLL FOR NEXT