தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 924

ஹரி கிருஷ்ணன்

‘உன்னை எப்போதும் வழிபட வேண்டும்’ என்று கோரும் இப்பாடல் பழநிக்கு உரியது.

அடிக்கு ஒற்றொழித்து 18 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, ஆறு ஆகிய சீர்களில் மூன்று குறில், ஒரு (கணக்கில் சேராத வல்லொற்று என மூன்றெழுத்துகளும்; இரண்டு, ஏழு ஆகிய சீர்களில் ஒரு நெடிலும் இரண்டு குறிலுமாய் மூன்றெழுத்துகளும்; மூன்று, நான்கு, எட்டு ஒன்பது ஆகிய சீர்களில் நான்கு-நான்கு குற்றெழுத்துகளும் அமைந்துள்ளன.

தனத்த தானன தனதன தனதன              தனதானா

அருத்தி வாழ்வொடு தனகிய மனைவியு      முறவோரும்

      அடுத்த பேர்களு மிதமுறு மகவொடு    வளநாடும்

தரித்த வூருமெ யெனமன நினைவது         நினையாதுன்

      தனைப்ப ராவியும் வழிபடு தொழிலது  தருவாயே

எருத்தி லேறிய இறையவர் செவிபுக          வுபதேசம்

      இசைத்த நாவின இதணுறு குறமக      ளிருபாதம்

பரித்த சேகர மகபதி தரவரு                  தெய்வயானை

      பதிக்கொ ளாறிரு புயபழ நியிலுறை     பெருமாளே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜீப் மீது லாரி மோதி விபத்து: 6 பேர் பலி

கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் -ஆய்வில் தகவல்

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

SCROLL FOR NEXT