இந்த நாளில்...

26.09.1888: புகழ்பெற்ற ஆங்கில கவிஞர் டி.எஸ். எலியட்டின் பிறந்த தினம் இன்று!

கவியோகி வேதம்

டாமஸ் ஸ்டெர்ன்ஸ் எலியட் (Thomas Stearns Eliot) அமெரிக்காவில், செயின்ட் லூயியில் 1888-ல் செப்டம்பர் 6-ம் தேதி பிறந்தார். அவருடைய தந்தை ஒரு வணிகர்; தாயார் பள்ளி ஆசிரியை. எலியட் அவர்களின் கடைசி மகன். அவருடைய தாயார் கவிதைகள் எழுதுவார். அவர் தான் எலியட்டுக்கு எழுதுவதற்கு ஆரம்ப கட்ட தூண்டுகோலாக இருந்தார்.

1906-ல் எலியட் ஹார்வார்டு பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். எலியட்டின் ஆரம்பகால முயற்சிகளை பல்கலைக்கழகத்தில் இருந்த ஒரு இலக்கியப் பத்திரிக்கை வெளியிட்டது. 1910-11-ல் எலியட் ஹார்வார்டிலிருந்து விடுப்பு எடுத்தக் கொண்டு பாரிஸில் தங்கியிருந்த போது எழுதிய சில கவிதைகள் 1915-ல் தான் பத்திரிகைகளில் வெளியாயின.

1914-ல் அவர் ஐரோப்பாவில் மார்பர்க் பல்கலைக் கழகத்தில் சிறிது காலம் படிப்பதற்காக வந்தார்.முதல் உலகப்போர் துவங்கியவுடன் ஆக்ஸ்ஃபோர்டு சென்று விட்டார்.

எலியட் தன்னுடைய இரண்டாவது திருமணத்துக்குப் பின் ஒன்றரை வருடம் பள்ளி ஆசிரியராக வேலை பார்த்தார். 1921-ல் லண்டனில் ஒரு வங்கியில் குமாஸ்தாவாகச் சேர்ந்தார். அதே வருடம் அவர் தனது முதல் கவிதை தொகுதியை வெளியிட்டார். 1921-ன் இறுதியில் அவர் எழுதிய அவருடைய புகழ்பெற்ற படைப்பான 'The Waste Land' பவுண்டின் எடிட்டிங்குப் பிறகு 1922-ல் வெளியானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி வெற்றி பெறுவது உறுதி கே.எம். காதா் மொகிதீன்

கடற்கரையில் தூய்மைப் பணி

செங்கோட்டையில் திருவிளக்கு பூஜை

சங்கரன்கோவிலில் திமுக சாா்பில் நீா்மோா் வாகனம்

சங்கரன்கோவிலில் வணிகா் தின பேரணி

SCROLL FOR NEXT