பெய்திடும் மழை துளியைவாய்த்திரந்து வாங்கிடும்சிப்பி தான் உனக்கன்னைமுத்தாக நீயும் பிறந்திருக்கநான் என்ன தவம் செய்தேன்பாக்கியமிதை அடைதற்கு சேயானாய் என்னாலேதாயானேன் உன்னாலேஉனக்கும் எனக்குமிந்தபந்தம் அரங்கேற நான்என்ன தவம் செய்தேன்பாக்கியமிதை அடைதற்கு மொட்டுக்கள் மலராகிவாசத்தை வீசும் போல்பாசத்தை பூசுகிறாய்உந்தன் மூலமிதை யடையஉன்னை க்கரமேந்த நான்என்ன தவம் செய்தேன்பாக்கியமிதை அடைதற்கு பசிவர கொஞ்சுகிறாய்முத்தமிட்டு கெஞ்சுகிறாய்அழுதும் மிஞ்சுகிறாய்தோஷமும் இல்லையதில்வேஷமும் இல்லையதில்நேசமே வழியக் கண்டேன் கல்கரைந்து மணலாகும்இரும்பும் தேய தூளாகும்தாய் மனதும் அங்கணமேஇன்னிலையை நானடையநான் என்ன தவம் செய்தேன்பாக்கியமிதை அடைதற்கு நோய் நுழைந்து பேயாட்டம்போடுகின்ற உலகினிலேஒலங்கள் திக்கெட்டு மென்அங்கம் பதறுததை க்கேட்டுஉன்னை க்காத்திடுவேன்உயிரைப் பணயம் வைத்து1