கவிதைமணி

விடையில்லா  விடுகதை: கவிஞர் இரா .இரவி 

கவிதைமணி

இந்த வாழ்க்கை எல்லோருக்கும் விடையில்லா  விடுகதை
என்று இறப்போம் என்பது யாருக்கும் தெரியாது !

இருக்கும் வரை நல்லபடி வாழ்வோம் மண்ணில் 
இருப்பவன் இல்லாதவன் வேற்றுமை வேண்டாம் !

கோபம் வெறி சூழ்ச்சி சதி ஒழிப்போம் 
கண்ணில் இரக்கம் கருணை வளர்ப்போம் !

சாதி மதம் பேதம் பார்க்க வேண்டாம் 
சகோதர வாழ்க்கை வாழ்வோம் என்றும் !

நானே பெரியவன் என்ற அகந்தை அழிப்போம்
நானிலத்தில் அனைவரையும் மதிப்போம் !

எனக்கு எல்லாம் தெரியும் என்ற கர்வம் 
எப்போதும் வராமல் எளிமை காப்போம் !

எவரையும் ஏளனம் செய்யாமல் இருப்போம் 
எவர் கூறும் கருத்துக்கு மதிப்பளிப்போம் !

தீங்கு செய்வோரை  யாரும் மதிப்பதில்லை 
தீங்கு செய்யாது வாழ்வதே வாழ்க்கையாகும் !

மூச்சு உள்ளவரை இந்த உலகில் உள்ளோருக்கு 
முடிந்தவரை நன்மைகள் மட்டுமே செய்வோம் !

இந்த உலகம் யாருக்கும் நிரந்தரமில்லை 
என்பதை  மனதில் கொண்டு வாழ்வோம் !

இன்று இருப்பார் நாளை இருப்பதில்லை 
என்ற தத்துவத்தை மனதில் கொள்வோம் !

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

SCROLL FOR NEXT