கவிதைமணி

இன்றைய தாலாட்டு: கோ. மன்றவாணன்

கவிதைமணி

ஆராரோ ஆரிரரோ
ஆரிரரோ ஆராரோ
ஆரமுதே பேரழகே
அழுவாது கண்ணுறங்கு

கால்கை தேஞ்சிருச்சு
கதிர்நெல்லு காஞ்சிருச்சு
காவிரியில் தண்ணியில்ல
கார்மேகம் காணவில்ல

பிஞ்சுமகள் வேண்டினாக்கா
பெய்யாதோ பூமழைதான்
கொஞ்சுமகள் கேட்டாக்கா
கொட்டாதோ வான்மழைதான்

ஏழைக்கும் செல்வருக்கும்
இருவேறு பள்ளிகளாம்
ஏற்றத் தாழ்வுகள்
இளமையிலே வளர்க்கிறாங்க
காமராசர் இருந்தாக்கா
கண்ணீர் உகுப்பாரு
கல்வியில நீ உயர
கடுஞ்சட்டம் வகுப்பாரு

நேத்துத் திறந்தாங்க
நீண்டதொரு பாலந்தான்
காத்து அடிச்சதால
கடகடவென விழுந்திடுச்சாம்
ஊழலத் துரத்தணுமே
ஊரத் திருத்தணுமே
இன்னொரு காந்திமகான்
எப்பத்தான் வருவாரு
போதையில தள்ளாடும்
பூமியிது பூமியிது
சமூகத்த காக்கவரும்
சாமியெது சாமியெது

கஷ்டத்தில் நாம்அழுதா
கண்ணீர் நனைக்குமடி
கண்ணீர்க்கும் வரிபோட
கவர்மெண்டு நினைக்குமடி
ஆராரோ ஆரிரரோ
ஆரிரரோ ஆராரோ
ஆரமுதே பேரழகே
அழுவாது கண்ணுறங்கு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT