கவிதைமணி

கல்லறைப் பூவின் கண்ணீர்த் துளி: பொன். குமார்

கவிதைமணி

கண்ணீர்த் துளிகளால் 
கட்டப் பட்டது
கல்லறை.

ஒவ்வொரு கல்லறைக்குள்ளும்
புதைக்கப் பட்டிருக்கும்
ஏராளமான சோகங்கள்.

இழப்பின் வலி
இருப்பவர் அறிவர்.
இறப்பின் வலி
இறந்தவரே அறிவர்.

கல்லறையின் மேல்
காணப் படுவது
பனித்துளிகள் போலான
கண்ணீர்த் துளிகள்.

அழுவதால் தீர்ந்து விடும்
இருப்பவரின் சோகம்.
இறந்தவரின் சோகம்
கல்லறையின் மீது
கண்ணீர்த் துளிகளாக
காட்சி அளிக்கின்றன.

கண்ணீரைத் துடைக்கும்
கரங்களுக்காக காத்திருக்கின்றன
கல்லறைகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

விஜய் தேவரகொண்டாவின் 14வது படம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT