கவிதைமணி

விடுதலை: இணுவையூர் வ-க-பரமநாதன்

கவிதைமணி

கொட்டியே கிடக்கின்ற குறைவற்ற வளமனைத்தும்
வெட்டியே தகர்க்கின்ற விளையாட்டைத் தடுத்தாங்கு
எட்டிடில் விடுதலையாம் இயற்கைத்தா யவளுக்குக்
கொட்டிடும் மாண்பென்று கொள்.

ஏழைகள் உழைப்பினையாம் இரவுபகல் உறிஞ்சிடுவோர்
சூழவே பெரும்செல்வம் சுகபோகம் பெறுகின்றோர்
வாழவே துடிப்போர்க்கு வழங்கிடினில் விடுதலையாம்
மாழுமாம் துயரங்கள் வா!

போட்டியும் அழுக்காறும் புரள்கின்ற நிலைமாற்றி
நாட்டினை வளர்த்திடவே நலத்திட்டம் பலவாக்கி
போட்டிகள் இலையென்ற போக்குடைய விடுதலையே!
காட்டிடும் வழியென்று காண்!

பேசிடும் மொழிபார்த்துப் பிறப்புதனைப் பழித்திங்கு
வீசிடும் முடைநாற்றம் விடுபட்டே யழிந்திடவும்
மேதினி நலம்பெறவே விடுதலையை விதைத்திடுவீர்
சோதியே முகிழ்ந்திடுமாம் சூழ்ந்து

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

SCROLL FOR NEXT