கவிதைமணி

ஆறோடும் - நீரோடும்: ஆனந்த் சுப்ரமணியம்

கவிதைமணி

ஆறோடும் நீரோடும்
வயல் பரப்பெங்கும்
சீராய்ப் பாய்ந்தோடும்
எங்கள் ஊரெங்கும்

விதை மண்ணுக்கு
உயிர் சேர்க்கும்
வயல் பரப்பிற்கு
பலம் சேர்க்கும்

கிராமத்தின்
அழகு மிளிரும்
நம் குடி நீரின்
தாகம் தணியும்

வாய்க்கால்கள்
பல இருக்கும்
நம் தேவைகளும்
அதில் அடங்கும்

பறவைகளும்
படையெடுக்கும்
நீர் அருந்தி
மனமகிழும்

மீன்களும் துள்ளி
விளையாடும்
நம் பார்வைக்கு
பரவசமாகும்

ஆற்றில் குளிப்போர்க்கு
உடல் ஆரோக்கியம்
சீராகும்
மனம் புத்துணர்ச்சி
பெற்றுவிடும்

ஆற்றங்கரையோரம்
அந்திசாயும் பொழுதோடும்
சலனமின்றி ஓடிடுமே
ஆறோடும் நீரோடும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

1000க்கும் அதிகமான திரைகளில் ‘நடிகர்’ திரைப்படம்!

“நான் முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

SCROLL FOR NEXT